Sunday, 20 August 2017

உடல் சூட்டைத் தணிக்கும் எண்ணெய் குளியலின் அற்புதங்கள்

அன்று ஒருநாள் வழக்கம் போல் இரயில் பயணம் என் கட்டை விரலும் சிட்டுக்குருவி சவப்பெட்டி (கைப்பேசி) மீட்ட கண்களோ இமைக்காமல் செய்தியை படித்துக்கொண்டிருந்தது. 

சகப்பயணி ஒருவர் என்னை பார்த்து எப்படி இவ்வளவு சிறிய எழுத்துக்களை படிக்கிறிங்க வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பிங்களா என்று கேட்டார். நான் எப்பொழுதோ ஒருமுறை என சொல்லி வழித்தடத்தில் இறங்கி விட்டேன். 

அதன்பின் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன பயன்கள் என தேடல்களில் "சனி நீராடு" என அவ்வையின் ஆத்திச்சூடி வரிகள் என் கவனத்தை ஈர்த்தது.

வாரத்தில் ஒருநாள் அதுவும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடு என்பதே இப்பாடலின் பொருள்.

Courtesy : dreamstime

நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து அரை மணிநேரம் கழித்து வெதுவான வெந்நீரில் குளிக்கும்பொழுது

1. கண்களின் எரிச்சல் நீங்கி கண் பார்வை கூர்மை பெறும். 

2. வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை நீக்கி குளிர்ச்சியை  தரும்.
3. முடி உதிர்வை கட்டுப்படுத்தும். 
4. தேகத்தின் பொலிவை மெருகூட்டி இளமை தோற்றத்தை உறுதிப்படுத்தும்.

பெண்கள் எண்ணெய் குளியலுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆண்களுக்கு சனிக்கிழமை. சிலர் நல்லெண்ணையுடன் சுக்கு பூண்டு மிளகு சேர்த்து சூடேற்றி பின்பு சூடு ஆரியதும் பயன்படுத்துவர். 

எண்ணெய் குளியல் நாட்களில் செய்யக்கூடாதவை: 

1. எண்ணெய் குளியலுக்கு பின் அந்நாளின் பகல் நேரங்களில் கண்டிப்பாக தூங்க கூடாது. 

2. சூரிய உதயத்திற்கு பின் காலை 7 - 8 மணிக்குள் எண்ணெய் குளியல் செய்துவிட வேண்டும். அதற்கு பிறகு செய்தல் நல்ல பயனளிக்காது.

3. குளியல் ஆரம்பம் முதலே தலையில் தண்ணீர் ஊற்றாமல் முதலில் கால்கள் கைகள் முகத்தை வெந்நெரில் கழுவி விட்டு பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றினால் உடல் வெப்பம் காதுகள் மற்றும் கண்கள் வழியாக வெளியேறி குளிர்ச்சி தரும். 

உடல் வெப்பத்தை தணித்தாலே பல நோய்கள் நம்மை அணுகாது.

Tuesday, 1 August 2017

கம்புப்பயிர் (Pearl Millet) அற்புத பயன்கள்

தான் ஒரு விஞ்ஞானி என்பதை தனக்கு தெரியாமல் வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்களே. வேளாண்மையின் தொழில்நுட்பம், வானிலை அறிக்கை, மண்ணியல் இப்படி பல விந்தைகளை ஆய்வுகூடம் இல்லாமல் கற்ற நம் முன்னோர்கள் விஞ்ஞானிகளே.

அளவில் சிரியது ஆனால் அள்ளித்தரும் பயன்களோ எண்ணில் அடங்காதவை. ஆம், மற்ற தானியங்களைக் காட்டிலும் கம்பில் அதிகளவு வைட்டமின்கள் உள்ளன. கம்பு உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆகவே தான் வெயில் காலங்களில் கம்புக்கூழ் முன்னோர்களால் காலை உணவாக உட்கொள்ளப்பட்டது. 

நன்றி : விகடன்

கம்பின் தனிச்சிறப்பு வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் யு உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.

புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என எண்ணற்ற உடல் ஆரோக்கிய காரணிகள் கம்புப்பயிரில் உள்ளன.

இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் காலை, மதிய வேளைகளில் கம்பை உணவாக உட்கொண்டு வந்தால் உடல் வலுவடையும். வயிற்றுப்புண் மற்றும் குடல் புண்களை ஆற்றும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

குழந்தைகள் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான சத்துக்கள் கம்பில் அதிகம். முடி வளர்ச்சிக்கும் முக்கிய பங்கி வகிக்கன்றது.

இந்தியாவில் அதிகமாகப் பயிரிடப்படும் சிறு தானியங்களில் கம்பு முதலிடம் என்னும் கூற்றே இதன் முக்கியத்துவத்தின் சான்று.